இனிமையான வாழ்வு

  • Sudarsun S
    Sudarsun S
    வானமே எல்லை என்று சிறகடிக்கும் இளமை
    வளமை மாறாது வண்ணங்கள் நிறைந்த கனவுகள்
    மதிமந்திரிகளாக மனம் நிறைந்த நண்பர்கள்
    வாழ்வியில் இனிக்குமோ இவையாவும் கிடைக்கப்பெறின்!
    Feathers Feathers
    2
  • Prathik Murali
    Prathik Murali
    நிரந்தரம் இதுவென வசந்தத்தின் தேனீக்கள் போல் 
    பறந்து திரியும் இளமை, முதுமையை அறியாது போலும் !  
    செழுமைமிகு கனா, கனாவாக நிலைக்க மதி மயங்கிய மாந்தர்கள், 
    "வழுவிலா" நண்பராயின் வாழ்வியலும் இனித்தருளுமோ ?
    Feathers Feathers
    3
  • Sudarsun S
    Sudarsun S
    வழுக்கியவனும் உயர்ந்தெழுவான்
    தளர்ந்தவனும் தழைத்தெழுவான்
    தன்னலம் பேனா பெருமான், நின் நண்பன்,
    தன் தோள்யின்று துணையிருந்தால்.
    Feathers Feathers
    1
  • Prathik Murali
    Prathik Murali
    வழக்கொழிவான் நாம் விழி முன்னே ! 
    அழுக்குடம்பை காலனும் விடுவானோ ? 
    கண் முன்னே மறைவான் ! அய்யகோ ! 
    இளமையின் இடிபாடுகளுக்கிடையில் முதுமை !
    Feathers Feathers
    2
  • Sudarsun S
    Sudarsun S
    உதித்ததன் நோக்கமதை உளமாற உணர்ந்தபின்
    காலனின் கடமையினூடே புகமாட்டார் புத்திமார்
    காலத்தே களம்காணும் ஞாலத்தேடல், அது
    கனிந்தபின் காலக்குடுவையினுள் நின்றுரைக்கமாட்டார்.
    Feathers Feathers
  • Prathik Murali
    Prathik Murali
    ஆசையிலே அவசரமாய் பிறந்த நம்மோர் 
    அவனியிலே அவதி உற்றழிவார்  திண்ணம் ! 
    ஆற்றினிலே கால் கழுவ போகும் மாந்தர் 
    சேற்றினிலே மறு காலை நிறுத்தி வைப்பார் !!
    Feathers Feathers
    3
  • Sudarsun S
    Sudarsun S
    உற்றவேடம் உடுத்திய தோலாடை
    ஏற்ற இச்சையினாலே திண்ணமானது
    எஞ்சிய பாத்திரம் அதை களைந்தப்பின்
    மிஞ்சுவது எடையில்லா இருப்பு  மட்டுமன்றோ!
    Feathers Feathers
    1
  • Prathik Murali
    Prathik Murali
    பொய் நின்ற ஞாலத்தே , பொல்லா ஒழுக்கொடு 
    வெறுப்போடு ஈகையை இச்சையுடன் காட்டாதே , 
    வேடம் உற்ற இடத்தில் வேட்டையாடி , 
    கர்மங்கள் சேர்ப்பாதே கருமமாய் திரிகின்றாரே !
    Feathers Feathers
    2
  • Sudarsun S
    Sudarsun S
    ஈகையும் கர்மமேவென்று புறத்தே பொருளீட்டுவோர்
    அகத்தே அறியப்படும்  சோதிகண்டோர்க்கூற்று அறியாரோ?
    பிரதிகர்மங்களினால் ஆட்கொண்ட சிறியார் தமக்கு
    விகர்மமே சாலச்சிறந்த தர்மம்மென தெரியாரோ?
    Feathers Feathers
  • Prathik Murali
    Prathik Murali
    விதியில் சாக்கியர் சமணர் முண்டர் ஆரியர் சூரியர் 
    என விரியும் பாதியில் முளைத்த பற்பல சாதிகள் ,
    தன்னெஞ்சு தன்னில் தொற்றினதே சொல்லுகையில், 
    பத்மமெனத்திகழ் பரஞ்சோதியின் பைங்கழல் பிடிப்பதறியாரே !
    Feathers Feathers
    2
  • Sudarsun S
    Sudarsun S
    அருளின் தழல்தனில் குறுகிக்கழல் பற்றினிற்றல்
    சாத்திரம் படைத்தோர் மார்கத்தில் பக்தியாம்
    பலனியற்றா கர்மம் விகர்மமேவென யோகமாம்
    நன்நட்பியற்றல் நன்மகள் துணையிருத்தல் அதிலுச்சமாம்!
    Feathers Feathers
  • Prathik Murali
    Prathik Murali
    நன்நட்பென்பதன் நற்பொருள் யாதும் காசிநியோர் உணராரே ! 
    உடலுக்கே கரைந்து நைந்து தமக்கென்று வாழ்ந்து வீழ்வார் ! 
    அடிமைத்திறமதன் பொருள் அறிவார், ஆண்டனை அறியதாரிவர்,
    கண்ணன் தாம் மொழிந்தவற்றை நீர் கூறினால் ஏற்பரோ ?
    Feathers Feathers
    1
  • Sudarsun S
    Sudarsun S
    ஏற்பதற்கோ எம்மான் மொழிந்த ஞாலம்
    ஏற்றவன் ஏற்றதன் கூற்று அறியுமுன்னே
     ஏற்றம் கொள்ளவா அவணியில் எழுந்தேன்
    எந்தை எமக்குரைத்த எதிர்வினைநோக்கா பகர்வு
    Feathers Feathers

Duel In Progress

  • இனிமையான வாழ்வு

    Sudarsun S Vs. Prathik Murali
    • Sudarsun S
      Sudarsun S
      வானமே எல்லை என்று சிறகடிக்கும் இளமை
      வளமை மாறாது வண்ணங்கள் நிறைந்த கனவுகள்
      மதிமந்திரிகளாக மனம் நிறைந்த நண்பர்கள்
      வாழ்வியில் இனிக்குமோ இவையாவும் கிடைக்கப்பெறின்!
      Feathers Feathers
      2